ஞாயிறு, 27 ஜனவரி, 2013

இன்று ஒரு நிர்பயா 

அதர்மத்தை அழித்த ஸ்ரீராமர் 
தர்மத்தை காத்த கிருஷ்ண பரமாத்மா 
அவதரித்த மண்ணில் 
பிறந்தேனென்று 
பெருமையோடு சொல்லும் 
இந்தியனே ......


நாட்டை 
தாயாக போற்றும் 
இந்தியனே........ 
இன்று பாரதம் 
ஒரு பெண்ணுக்கு 
இப்படியொரு கொடூரம் 
இழைத்திருக்கிறது .......

பெண்ணை 
சக்தியாக மதிக்கும் 
இந்தியனே .......
இன்று தாயகம் 
பெண்ணுக்கு 
பாதுகாப்புத் தர 
மறுத்திருக்கிறது ......

உலகமே 
வியந்து பாராட்டிய 
பெண்மைக்கு 
இன்று தேசம் 
கேவலத்தை 
கொடுத்திருக்கிறது .......


பெண்கள் 
எத்தனை காலங்கள் 
கூண்டுக் கிளியாக 
வாழ வேண்டும் .......
நடை பிணமாக 
நடக்க வேண்டும் ........


இன்று 
ஒரு நிர்பயா 
இன்னும் 
எத்தனை நிர்பாயக்களோ ...........





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக